ஜோலார்பேட்டை நகராட்சி ஊழியர்களுடன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்ட அதிமுக நகர செயளாளர் சீனிவாசன்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா வைரஸ் தாக்கம் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7 தடுப்பு பணி குழுக்கள் மூலம் 19 இயந்திரங்கள் மூலம் 165 நகராட்சி பணியாளர்களை கொண்டு 18 வார்டுகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்றது. இந்த பணியில் பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் சீனிவாசன் நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கோவில்கள், பள்ளி வளாகம், விளையாட்டு திடல் மற்றும் சாலைகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக வீடுகளில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர். நகர செயலாளர் சீனிவாசனின் இந்த சமூக சேவை ஜோலார்பேட்டை நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடர் ஆன்லைனில்...
செய்திகள்- கோவி- சரவணன்...