திருவாரூர் அருகே விவசாயிகளுடன் உரையாடி வயலில் இறங்கி நாற்று நட்ட தமிழக முதல்வர்...
திருவாரூர் மாவட்டத்தில் தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் முதலமைச்சரும் வயலில் இறங்கி நடவு நட்டார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தில், விவசாயிகளுடன் உரையாடியபடியே முதலமைச்சர் வயலில் இறங்கி சென்றார். அப்போது கோடை சாகுபடிக்கான நடவுப் பணி நடைப்பெற்றது. அப்போது முதலமைச்சரும் விவசாயிகளுடன் சேர்ந்து நடவு நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக முதல்வர் நானும் ஒரு விவசாயி என கூறி வருகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வாரம் நக்கல் நையாண்டி செய்து இருந்தார். அப்போது தமிழக முதல்வர் ஒரு விவசாயியின் அருமை இன்னொரு விவசாயிக்கு தான் தெரியும் என பதில் அடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...