வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது..
காந்தி-இர்வின் ஒப்பந்தம் (Gandhi–Irwin Pact) என்பது 1931-ல் மகாத்மா காந்திக்கும் இந்திய வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்ததைக் குறிக்கிறது.
1930 சட்டமறுப்பு இயக்கத்துக்குப் பின்னர் இது ஆங்கிலேய அரசுக்கும் இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும்.
மூன்று வாரகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் விளைவாக இந்தியர்களுக்கு அதுவரை மறுக்கப்பட்ட பல உரிமைகள் திரும்ப அளிக்கப்பட்டன.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...