திருப்பத்தூரில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்...
பிப்ரவரி 24ஆம் தேதி அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் நாளாக கொண்டாட தமிழக அரசு அரசாணை வெளியீட்டது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் பெரிய கசிநாய்க்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனமான சேஞ்ச் நிறுவனம் மற்றும் HAPS நிறுவனம் இனைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு போட்டி. கட்டுரை போட்டியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் HAPS நிறுவன இயக்குனர் பழனி வேல்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜனார்த்தனன், மருத்துவர் சந்திரா, சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உஷா நன்றி கூறினார்...
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்தி- கோவி.சரவணன்...