விருத்தாசலம் அருகே தனியார் நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தில் சாஸ்தா குழுமம் சார்பாக ஆலிச்சிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஆலிச்சிகுடி ஊராட்சி மன்ற தலைவர் சின்னபிள்ளைபெருமாள் தலைமை நடைபெற்றது
இந்த இலவச பொது மருத்துவ முகாம் துணை மருத்துவ கண்காணிப்பாளர் பானுமதி, தலைமையிலான குழுவினர் மருத்துவர்கள் நாகராஜ், கார்த்திகேயன், சுப்ரமணி உள்ளிட்ட மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினரால் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது.
இந்த முகாமிற்கு மாவட்ட கவுன்சிலர் ராஜேஸ்வரி சுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், ஆடிட்டர் கருணாநதி, நகர் அரசு பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விருத்தாசலம் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் தலைவர் மணிக்கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் நீதி வள்ளல், கேஎஸ்ஆர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல், சாஸ்தா குழுமம் உரிமையாளர்கள் பொறியாளர் முருகவேல், பொறியாளர் சக்திவேல், வழக்கறிஞர் பழனிவேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- காமராஜ்..