ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் விழா....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது...
இவ்விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன, காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது...
மேலும் குறைந்த நேரத்தில் பந்தய தொலைவை எட்டிய காளைக்கு முதல் பரிசாக 55,555 ரூபாயும், இரண்டாம் பரிசாக 44,444 ரூபாயும் மூன்றாம் பரிசாக 33,333 ரூபாயும் வழங்கப்பட்டது....
மேலும் இவ்விழாவை காண பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் இவர்களை கட்டுப்படுத்த 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.....
மேலும் இந்த விழாவில் காளை முட்டியதில் ஊர்காவல் படை சேர்ந்த காவலருக்கு கால் முறிவு ஏற்பட்டது மேலும் 10 க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்ப்பட்டது.....
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...