ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் விழா.

ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் விழா....



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது...


   இவ்விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன, காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது...


  மேலும் குறைந்த நேரத்தில் பந்தய தொலைவை எட்டிய காளைக்கு முதல் பரிசாக 55,555 ரூபாயும், இரண்டாம் பரிசாக 44,444 ரூபாயும் மூன்றாம் பரிசாக 33,333 ரூபாயும் வழங்கப்பட்டது....


  மேலும் இவ்விழாவை காண பல்வேறு ஊர்களிலிருந்து  ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் இவர்களை கட்டுப்படுத்த 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.....


 மேலும் இந்த விழாவில் காளை முட்டியதில் ஊர்காவல் படை சேர்ந்த காவலருக்கு கால் முறிவு ஏற்பட்டது மேலும் 10 க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்ப்பட்டது.....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image