திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் சுகாதார திருவிழா-சிறப்பு மருத்துவ முகாம்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லிவாசல் நாடு ஊராட்சி புலியூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் மத்திய- மாநில அரசு சார்பில் சுகாதார திருவிழா மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் துணை இயக்குநர்,சுகாதார பணிகள் டாக்டர் சுரேஷ் உட்பட மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் மொத்தம் 927 பேர் பயன்பெற்றனர். 34 பேருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது. 72 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.220 பேருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 8பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உயர்தர சரிவிகித உணவு பரிமாறப்பட்டது. முகாம் முடிவில் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சங்கர் நன்றி கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
tamilsudarr.page.
செய்திகள்- கோவி. சரவணன்...