அரசு உதவித்தொகையை வழங்குவதில் பல இலட்சம் ரூபாய் கல்லா கட்டிய அரசு அதிகாரிகள்.
தமிழ்நாடு முழுவதும் தகுதியான நபர்களுக்கு புதிதாக OAP வழங்கச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்படி வழங்கப்படும் OAP-களுக்கு VAO முதல் தனி தாசில்தார் வரை ரூ.8000/- வரை செலவு செய்ய வேண்டியுள்ளதாக தகுதி வாய்ந்த ஏழை விண்ணப்பதாரர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாவது, குறைந்தபட்சம் VAO-க்கு 2000, அவரது உதவியாளருக்கு 500, RI-க்கு 1000,
தனி தாசில்தாருக்கு 2000,
அவரது உதவியாளருக்கு 1000. என எப்படியும் 8000/- வரை செலவாகும் என்று சொல்லி கறாராக வசூலித்து விடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மேலும், இதன்மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி உட்பட தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் தனி தாசில்தார்கள் பல இலட்சங்கள் கல்லா கட்டியுள்ளதாகவும், தற்போது அவர்களின் காட்டில்தான் மழை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தகுதியான நபர்களுக்கு OAP வழங்க சொல்லிதான் அரசு உத்தவிட்டுள்ளதே தவிர, அவர்களிடம் பணம் வசூல் செய்துதான் வழங்க வேண்டும் என்று கூறவில்லை.
எனவே, இதன் பேரில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி- கோவி.சரவணன்..