இரவில் தடியடி. காலையில் முதல்வருடன் சந்திப்பு சென்னை காவல் துறை அதிரடி...


இரவில் தடியடி. காலையில் முதல்வருடன் சந்திப்பு சென்னை காவல் துறை அதிரடி...


சென்னை:


பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று காவல் துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


குடியுரிமை சட்டத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.


போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தடியடியில் ஒரு முதியர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது பொய் என்று சென்னை காவல்துறை விளக்கவிட்டது.


இந் நிலையில், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  தடியடி போராட்டம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.


இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.


பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண்பது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.


பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படாமல் அமைதி காக்க சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்திகள்- கோவி. சரவணன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image