கோவை  குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும்  முன்னாள் மத்திய அமைச்சர் தமிழக அரசுக்கு கோரிக்கை..

கோவை  குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும்  முன்னாள் மத்திய அமைச்சர் தமிழக அரசுக்கு கோரிக்கை..


கோவையில் மத்திய அரசு கொண்டுவந்த  குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மற்றும்  1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும்  பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.


இந்த பேரணியில் பாஜகவின்  மாநிலபொது செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர்  ராகவன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா  சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி
கோவை அவினாசிலிங்கம்  மகளிர்  பல்கலைகழகம்  முன்பாக இருந்து  துவங்கி கோவை நகரின்  முக்கிய வீதிகளின் வழியாக சென்று  கோவை ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இந்த  பேரணியில் 4 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர்.


பேரணியின்  முடிவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்.


கோவையில் கடந்த 1998ல்  நடந்த குண்டு வெடிப்பில் 58 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர், இதில் 1000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில்  இறந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு  ஆண்டுதோறும் பேரணி மற்றும் அஞ்சலி  நடத்தப்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள்  இனி இந்தியாவில் எங்கும்  நடக்க கூடாது என்பதற்காகவே  இந்த பேரணி  நடத்தப்படுகிறது.
கடந்த 21 ஆண்டுகளாக இந்த  பேரணிக்கு காவல் துறை  அனுமதி கொடுப்பதில்லை இருந்தாலும்  இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடை   தடையை  மீறி பேரணி  நடத்துவதும், பின்னர் காவல்துறை கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது என தெரிவித்தார்.


21 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு இந்த ஆண்டுதான்  அனுமதி  வழங்கி இருக்கின்றனர் எனவும் ,அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
1998 ல் நடந்த இந்த துயரம் கோவைக்கு ஏற்பட்ட  அவமானம் என கூறிய அவர், கோவையில் இறந்த தியாகிகளுக்கு  நினைவுசின்னம் இருக்கவேண்டும் எனவும், எனவே ஆர்.எஸ்.புரத்தில்  குண்டு வெடித்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்க வேண்டும் எனவும் ,
எடப்பாடி பழனிச்சாமி அரசு  இதற்கு செவி சாய்க்க  வேண்டும் எனவும் தெரிவித்தார்.தமிழக அரசு நினைவு தூண் அமைக்க ஆவண செய்ய  வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது எனவும், அப்படி கொடுத்தால் கொலையில் முடியும் என கூறிய அவர், இதற்கு உதாரணம் வில்சன் கொலை என தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டுகின்றன என கூறிய அவர்
திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பல இடங்களில் ஆத்தரவில்லை என தெரிவித்தார்.2 கோடி கையெழுத்து என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என கூறிய அவர், ஒரு கோடி கையெழுத்து என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் எனவும் , கோடியில் ஓரு கையெழுத்து என்பதுதான் உண்மை எனவும்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை குண்டு வெடிப்பு தினம் மற்றும் பா.ஜ.கவின் பேரணி மற்றும் அஞ்சலி  கூட்டம்  நடைபெறுவதை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி ஜெயந்த்  முரளி தலையில் 3500  காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


tamilsudarr.page


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image