ஆம்பூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நில உரிமையாளர் வீட்டை முற்றுகை..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா -ஏ பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் கொடுக்க இருக்கும் திரு. கிருஷ்ண லால் ஜெயின் அவர்கள் நிலம் தரக்கூடாது என கோரிக்யின் தெடர் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக கஸ்பா-ஏ 4 வது வார்டு கருமாரியம்மன் கோவில் இரு தெருவை சார்ந்த 150 க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் கொடுக்க கூடாது என மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட நில உரிமையாளர் திரு கிருஷ்ண லால் அரசிடம் பொதுமக்களின் நலன் கருதி நிலம் கொடுப்பதில் என உறுதி அளித்தார். அதையடுத்து அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அரசுக்கு நிலம் கொடுக்கும் உரிமையாளரை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி. சரவணன்- அரவிந்த்...