காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா - 72 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்..
செங்கல்பட்டு, பிப்.25: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சியில் முன்னாள் ஆலப்பாக்கம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க நிர்வாகியுமான சல்குரு நிகழ்ச்சி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையொட்டி அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே 72 கிலோ கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பீடி நகரில் சாதிக் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா பென்சில்களை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில், காஞ்சி மத்திய மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கெளஸ்பாஷா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பொருலாளர் பலராமன், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உமாபதி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் காமராஜநகர் சேகர், உட்பட அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- உத்தமன்- மாவட்ட செய்தியாளர்...