சேலம் அருகே நேபாள நாட்டு  சுற்றுலா பயணிகள் வாகனம் விபத்து  6 பேர் பலி.30 பேர் படுகாயம்..

சேலம் அருகே நேபாள நாட்டு  சுற்றுலா பயணிகள் வாகனம் விபத்து  6 பேர் பலி.30 பேர் படுகாயம்..


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நரி பள்ளம் என்ற இடத்தில் நேபாள நாட்டு சுற்றுலா பேருந்து  கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக  ராஜஸ்தான் நோக்கி  சென்று கொண்டிருந்ததது. அப்போது அந்த பேருந்து  ஓமலூர் அடுத்த  நரி பள்ளம்  அருகே, 'ஆரஞ்ச்' என்ற சொகுசு பேருந்து  மீது வேகமாக  மோதி விபத்துக்குள்ளானது. இந்த சாலை  விபத்தில் 6 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து   உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் காவல்துறையினர் படுகாயம் அடைந்த 30 பேர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின் உயிரிழந்த 6 பேர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில்  சுற்றுலா வந்த நேபாள நாட்டு பயணிகள் 6பேர்  சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மற்றும் திருப்பூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்  தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் மற்றும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image