சேலம் அருகே நேபாள நாட்டு  சுற்றுலா பயணிகள் வாகனம் விபத்து  6 பேர் பலி.30 பேர் படுகாயம்..

சேலம் அருகே நேபாள நாட்டு  சுற்றுலா பயணிகள் வாகனம் விபத்து  6 பேர் பலி.30 பேர் படுகாயம்..


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நரி பள்ளம் என்ற இடத்தில் நேபாள நாட்டு சுற்றுலா பேருந்து  கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக  ராஜஸ்தான் நோக்கி  சென்று கொண்டிருந்ததது. அப்போது அந்த பேருந்து  ஓமலூர் அடுத்த  நரி பள்ளம்  அருகே, 'ஆரஞ்ச்' என்ற சொகுசு பேருந்து  மீது வேகமாக  மோதி விபத்துக்குள்ளானது. இந்த சாலை  விபத்தில் 6 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து   உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் காவல்துறையினர் படுகாயம் அடைந்த 30 பேர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின் உயிரிழந்த 6 பேர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில்  சுற்றுலா வந்த நேபாள நாட்டு பயணிகள் 6பேர்  சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மற்றும் திருப்பூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்  தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் மற்றும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image