ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் திருப்பத்தூர் வரை இயக்க பொதுமக்கள் கோரிக்கை..

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் திருப்பத்தூர் வரை இயக்க பொதுமக்கள் கோரிக்கை..


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு மற்றும்  மேற்கு என இரு பகுதியையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ஜோலார்பேட்டை பகுதி  பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை  வைத்த நிலையில் அந்த மேம்பாலம் கட்டும் பணிக்கு  மத்திய அரசுக்கு மாநில அரசு சுமார் 20 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து  மூன்று தவணைகளாக நிதி கொடுக்க ஒப்புக் கொண்டு பணியை தொடங்கிய நிலையில் தற்போது முடியும் தருவாயில் சுமார் 4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான காசோலையை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்  தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம்  வழங்கினார். இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட அச்சக கூட்டுறவு சங்கத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இந்த நிதி கொண்டு  ரயில்வே மேம்பாலப் பணிகள்  விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து திருப்பத்தூர் வரை இயக்கப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது திருப்பத்தூர் மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்து பெற்றுயிருக்கும்  நிலையில் மீண்டும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் வரையங்கவேண்டும் என்பது திருப்பத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது அந்த கோரிக்கை நிறைவேறுமா என்ற ஏக்கத்துடன் திருப்பத்தூர் நகர வாசிகள்....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image