அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரளா பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு போலிசார் விசாரணை..
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை நோக்கி கேரளா மாநில அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து பயணிகளைக் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி தனியாருக்கு சொந்தமான டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியும் தீடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டன இந்த கோர விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசி போலிசார் மற்றும் பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சொகுசு பேருந்தில் மொத்தம் 48 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 25 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்து தமிழக- கேரளா மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page.
செய்திகள்- கோவி.சரவணன்...