தங்கப் புதையலைக் காட்டும் அட்சயப் பாத்திரம். மர்ம நபர்களிடம் 2 கோடி  பணத்தை பறிகொடுத்த திருப்பத்தூர் வாலிபர்.


தங்கப் புதையலைக் காட்டும் அட்சயப் பாத்திரம். மர்ம நபர்களிடம் 2 கோடி  பணத்தை பறிகொடுத்த திருப்பத்தூர் வாலிபர்...


திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூரைச் சேர்ந்தவர் நவீன். இவர் அஃதே பகுதியில்  சுமி ஸ்டூடியோ கலர் லேப்’ என்ற ஸ்டூடியோவையும் லட்சக்கணக்கில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திருப்பத்தூருக்கு வந்து நவீனைச் சந்தித்துள்ளனர்.  அப்போது அவர்கள் எங்களிடம் அதிசய  அட்சயப் பாத்திரம் ஒன்று  உள்ளது. அதை வாங்கி நீங்கள்  பூஜை அறையில் வைத்துப் பூஜிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட சில நாள்கள்  கழித்து அட்சயப் பாத்திரத்தைத் திறந்துபார்த்தால் அதில்  தங்கப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும். அதிலிருந்து வரும் சிக்னலை வைத்து தங்கப் புதையல் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கிலோ கணக்கில் தங்கமாக எடுத்துக்கொள்ளலாம் இந்த  அட்சயப் பாத்திரம் குறித்து யாரிடமும் குறிப்பாக  உங்கள் மனைவியிடம் கூட வாய்த் திறக்கக் கூடாது. அப்படி  சொன்னால் அதனுடைய சக்தி போய்விடும்’’ என்று நவீன் இடம்  ஆசையைத் தூண்டிவிட்டது. இதனை நம்பிய நவீன்  எப்படியாவது இந்த  அட்சயப் பாத்திரத்தை வாங்கிவிட வேண்டும்  என்று பலமுறை  யோசித்தார். அதன்பின்  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிப்பள்ளி பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்கு நவீனை அந்த மோசடி கும்பல்    அழைத்துச் சென்றது. அங்கு  வண்ண  காகிதங்களால்  ஒட்டப்பட்டுச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டியைக் காண்பித்து இதுதான் அந்த அதிசய  அட்சயப் பாத்திரம் இதை தொட்டுக் கும்பிட்டுக் கொள் என்று கூறியுள்ளனர். அப்போது  அந்த அட்சயப் பாத்திரத்தைத் திறந்து காண்பித்து  அதிலிருந்து ஒரு  சிக்னல் காட்டுவதைப் போன்று லைட்டுகள்  எறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே நவீனை அந்த மோசடி கும்பல்    அருகில் உள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று பள்ளம் தோண்டினர். அங்கு  நவீனுக்குத் தெரியாமல் ஏற்கெனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு  சில தங்க நகைகளை எடுத்துக் காட்டி நவீனை  நம்ப  வைத்துள்ளனர். இதில்  பிரமித்துப் போன நவீன் இதை எப்படியாவது  வாங்கி விட  வேண்டும் என்ற பேராசையில் அந்த கும்பலிடம் இதை எனக்கு தரும் படி கேட்டுள்ளார். அப்போது கூறிய அந்த மோசடி கும்பல் அவ்வளவு எளிதில் நாங்கள் உங்களுக்கு  கொடுத்துவிட மாட்டோம். இதற்கென தனி பூஜை அறை வைத்துக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?? என்றெல்லாம் அந்தக் கும்பல் நவீனிடம் பெரிய   பில்டப்புக்கு மேல் பில்டப் கொடுத்துள்ளது.  பின்னர் ஒரு வழியாக ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு பேரம் பேசி அந்த அதிசய  அட்சய பாத்திரத்தை நவீன்  வாங்கிவிட்டார். அதன்பின் என்ன தனது  வீட்டுக்கு ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து தினமும் சிறப்பு  பூஜைகள்  செய்து சில நாட்கள் கழித்து திறந்து பார்த்தார். அப்போது அவருக்கு திடுக்கிடும் அதிர்ச்சி காத்திருந்தது அந்த மர்ம கும்பல் கூறிய படி நகைகள் இருக்கும் புதையலை அந்தப் பெட்டி காட்டவில்லை. பிறகு அதைச் சோதனை செய்தபோது, அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. அதில்   வெறும் மரத்துண்டுகளும் ஒரு சில பேட்டரி லைட்டுகளும் தான் இருந்துள்ளது. அதன்பின்பு தான் ஏமாற்றப்பட்ட இருப்பதைக்கண்டு தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.  அப்போது உறவினர்கள் நீ என்ன முட்டாளா.. இந்த நவீன காலத்தில் எப்படி யாராவது ஏமாறலாமா   என்று திட்டித் தீர்த்து உள்ளனர். அதன்பின் என்ன  தனது  நண்பர்களை அழைத்துக்கொண்டு ஆந்திரா மாநிலம்  சித்தூரில் உள்ள அந்த மர்ம கும்பல்கள் இருந்த  வீட்டுக்குச் சென்றனர்.  அங்கு அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது அங்கு  யாருமில்லை. இதையடுத்து  அருகில் உள்ள  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆந்திரா  போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில்  திருப்பதி அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள்  8 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். இதில்  சந்தேகமடைந்த ஆந்திரா  போலீஸார் அவர்களை துரத்திப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின அதில்  திருப்பத்தூர் மாவட்டத்தை  நவீனை ஏமாற்றி அட்சயப் பாத்திரத்தை விற்றவர்கள் என முதல் கட்ட  தெரியவந்தது. அதன்பின் தீவிர  விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த மகாதேவா (42) மற்றும் சிவக்குமார் (19), சிக்பல்லாபூர் பகுதியைச் சேர்ந்த கங்காதர் (30), பெங்களூருவைச் சேர்ந்த தனசேகர் (35), சித்தூரைச் சேர்ந்த சீனப்பா (35), கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா (40), வேப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (28), காஞ்சிபுரம் ராஜகுளம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (35) என்று தெரியவந்தது.


8 பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து 1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். மேலும், இரண்டு கார்கள், பைக்கை பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய திருப்பத்தூரைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணைக்காக நவீனையும் ஆந்திர போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். பிடிபட்ட கும்பல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் அட்சயப் பாத்திரம் எனக்கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. பேராசை பெருநஷ்டம் தத்துவத்தின் அடிப்படையில் அட்சய பாத்திரம் என்ற மோகத்தால் பல இளைஞர்களின் வாழ்க்கை  சீரழிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது...


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..



செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image