ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தப்பி ஓடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான திம்மாம்பேட்டை பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்வது வழக்கம் இதை பயன்படுத்திய அரிசி கடத்தல் கும்பல் மினி லாரி மூலம் தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை திம்மாம்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் தமிழக எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிற்காமல் அதிவேகமாக சென்ற மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 2.5 டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்தனர் லாரியில் இருந்து 2 பேர் தப்பி ஓடி உள்ளனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர் இது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்.
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்த்..