வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே...
பிப்ரவரி 19, 1627 - இன்று மாவீரன் சிவாஜின் பிறந்த நாள்..
சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை கட்டியவர். மொகலாய சுல்தானிய அரசுகளின் பரவலைத் தடுத்திட இறுதிவரை போராடிய மாவீரர்.
தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார்.
அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்று மகாராட்டிர மாநிலத்தில் வீர சிவாஜி என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இந்தியா வரலாற்றில் குறிப்பாக இந்துக்கள் வரலாற்றில் வீர சத்திரபதி சிவாஜி ஒரு மாபெரும் கடவுளாக வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page
வரலாற்று சுடர்...