திருப்பத்தூரில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முதியோர் இல்லத்தில் புத்தக வெளியீடு.
திருப்பத்தூர் மாவட்டம் CK ஆசிரமம் பகுதியில் இயங்கி வரும் மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தின் சார்பாக காந்தியடிகளின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அரிய புகைப்படங்களின் கண்காட்சி மற்றும் காந்தியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் செம்மல் முனைவர் ரத்தினநடராஜன் புத்தகத்தை வெளியிட்டார். முதியோர் இல்ல நிர்வாகி கிஷோர் பிரசாத் தலைமையேற்றார்.
இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காந்தியின் வாழ்கை வரலாற்றை அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த புகைப்பட கண்காட்சியின் மூலம் கண்டறிந்தனர்.
செய்தி- கோவி.சரவணன்...