திருப்பத்தூர் அருகே  108 ஆம்புலன்ஸ் விபத்து 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.

திருப்பத்தூர் அருகே  108 ஆம்புலன்ஸ் விபத்து 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாலனங்குப்பம் கூட்டு ரோடு பகுதியில் ஜோலார்பேட்டை போலிசார் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலிசார் துரத்திப் பிடிக்க முற்பட்டபோது. திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி அதிவேகமாக வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென இருசக்கர வாகனம் ஓட்டி மீது மோதாமல் இருக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதில் நிலை குலைந்த 108 ஆம்புலன்ஸ் அருகில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் மீது குப்புற கவிழ்ந்து  விபத்திற்குள்ளானது. இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டியை பிடிக்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்து அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும்  சோகத்தையும் மற்றும் அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


தமிழ் சுடர் ஆன்லைனில்..


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image