திருப்பத்தூர்:
ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டில் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 35 சவரன் நகை மற்றும் ஏடிஎம் கார்ட் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவர் தன் மனைவி மற்றும் மகளுடன் இன்று காலை தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாலை பழனி தன் குடும்பத்துடன் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பூட்டியிருந்த கதவை சாவியின் மூலம் திறந்து பீரோவிலிருந்த 35 சவரன் நகை மற்றும் 1லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் கார்டினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அக்கம் பக்கத்தினிரிடம் யாராவது சந்தேகத்தின் படும் நபர்கள் நடமாட்டம் இருந்ததா அல்லது பழனியின் உறவினர்களே இவர்கள் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page
செய்தி- கோவி. சரவணன். அரவிந்த்...