கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் குள்ளமான தம்பதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது27). ஈரோடு அடுத்த கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் நடத்தி வைத்தனர். இந்த திருமண தம்பதியர் குள்ளமானவர்கள் ஆவார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு குள்ளமான தம்பதிகள் சரண்யா மற்றும் கார்த்திகேயன் இருவரும் மனு ஒன்றை மனு அளித்தனர்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் பட்டதாரி பெண் மற்றும் கணவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். தற்போது கணவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். அதில் போதிய வருமானம் இல்லை வறுமையான சூழ்நிலை நிலவி வருவதால் எங்கள் இருவருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வேலைவாய்ப்புகளும் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் எங்களுக்கு வாழ்வாதாரம் படுத்திக்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.