வாணியம்பாடியில் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் நடத்தப்படும் சூதாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதிகளில் மயில் திருவிழாவை முன்னிட்டு 154 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன ஏராளமான பொதுமக்கள் மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனர் இதில் திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளை குறிவைத்து இளைஞர்கள் மத்தியில் சூதாட்டம் நடைபெறுகிறது அதில் மூன்று கட்டை சூதாட்டம் பணத்தை வைத்து விளையாடுகின்றனர் அங்கு வரக்கூடிய அவர்களில் குறிவைத்து இந்த சூதாட்ட கும்பல் நடத்துகின்றனர் அப்போது அங்கு வந்த காவல் துறையினர் விரட்டியும் கூட செல்லாமல் தொடர்ந்து மூன்று கட்டை சூதாட்டம் நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் வரக்கூடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவதால் இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.