புகழ்பெற்ற வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை பக்தர்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகேயுள்ள புகழ்பெற்ற வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் பகுதியில் புதிதாக அமைக்கபட்ட தார் சாலையை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் திறந்துவைத்தார்.
அடுத்த மாதம் மாசி திருவிழா தொடங்கவுள்ள நிலையில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மகாமுனி கோவிலில் இருந்து பொன்னர் - சங்கர் கோவில் வரையிலான இந்த சாலை 25.45 லட்சம் செலவில் தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில் இந்த சாலையை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, வீரப்பூர் பகுதியின் தேமுதிக ஒன்றிய கவுன்சிலர் அர்ச்சுனன், நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, Ex. கவுன்சிலர் சக்தி, காவியக் கண்ணன், ஊராட்சி செயலாளர் பொன்னார், பாசறை ஒன்றிய செயலர் தங்கவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.