செங்கல்பட்டு பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கில் பாமக நிர்வாகி கைது..

செங்கல்பட்டு பெரியார் சிலை சேதப்படுத்திய வழக்கில் பாமக நிர்வாகி கைது..


துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் பற்றி ரஜினி பேசியதை அடுத்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகள் நடந்தன. ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் நிற்க, ரஜினியின் கருத்துக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நின்றன.


இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் களியப்பேட்டை என்ற இடத்தில் இருந்த பெரியார் சிலை சில நாட்களுக்கு முன் உடைக்கப்பட்டது. பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வந்தனர்.


இந்நிலையில், சாலவாக்கம் களியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர்
கோ.தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- கோவி.சரவணன்- உத்தமன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image