ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தல் கூட்டத்தை கலைக்க போலீசார் விரட்டி விரட்டி ரசிகர்கள் மீது தடியடி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் 178-ஆம்ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது இதில் ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டன காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் பல்வேறு பகுதிகளிலிருந்து வரப்பட்ட ரசிகர்கள் மஞ்சுவிரட்டு போட்டியை காண அங்கு குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி.சரவணன்...