திருப்பத்தூர் மாவட்ட  விளையாட்டு கழகம் சார்பில் வாலிபால் போட்டிகள் அமைச்சர்  வீரமணி  துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட  விளையாட்டு கழகம் சார்பில் வாலிபால் போட்டிகள் அமைச்சர்  கே சி வீரமணி  புதிய கோப்பையை அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை   பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டு திடலில்  மாவட்ட விளையாட்டு கழக தலைவர் சீனிவாசன் தலைமையில் வாலிபால்  விளையாட்டு போட்டிக்கான   புதிய கோப்பை அறிமுகம் மற்றும் போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.  வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு புதிய கோப்பையை அறிமுகப்படுத்தினர். அதன்பின்  வாலிபால்  போட்டில் கலந்துகொண்ட வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரும்  விளையாட்டு போட்டியை  விளையாடி போட்டியை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் மாவட்ட  கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், ரமேஷ் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.   இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு  அணிகள் கலந்துகொண்டனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image