திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு கழகம் சார்பில் வாலிபால் போட்டிகள் அமைச்சர் கே சி வீரமணி புதிய கோப்பையை அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டு திடலில் மாவட்ட விளையாட்டு கழக தலைவர் சீனிவாசன் தலைமையில் வாலிபால் விளையாட்டு போட்டிக்கான புதிய கோப்பை அறிமுகம் மற்றும் போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு புதிய கோப்பையை அறிமுகப்படுத்தினர். அதன்பின் வாலிபால் போட்டில் கலந்துகொண்ட வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரும் விளையாட்டு போட்டியை விளையாடி போட்டியை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், ரமேஷ் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்துகொண்டனர்.