விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சன்னதி முன்பாக அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட அம்மன் பக்தர்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் எழுந்தருளியுள்ள ஜெகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 21 ஆண்டு காலமாக தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து மண் சோறு சாப்பிட்ட பக்தர்கள்.
இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடைபெறவும், குழைந்த பாக்யம் வேண்டியும், தங்கள் குடும்ப கஷ்டங்களை போக்கவும் அம்மன் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் தை மாத அமாவாசை அன்று மாலை அணிவித்து மூன்று நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்தனர். இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஜெகமுத்து மாரியம்மன் ஆலய பூசாரி பாலு சிறப்பாக செய்திருந்தார்.