ராணிப்பேட்டை அருகே மூடுபனியால் வாகனங்கள் மோதி விபத்து, திமுக பிரமுகர் உட்பட பலர் படுகாயம்.
சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரம் தொடங்கி, காலை 10 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதே வேளையில் சென்னை உள்பட நாட்டில் சில நகரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பெரும்பாலானோர் கோட் அணிந்து கொண்டும், தங்கள் காதுகளை மூடிக் கொண்டுதான் இரவு நேரங்களில் வெளியே வரக் கூடிய சூழல் ஏற்பட்டது. ஜனவரி மாதம் தொடங்கியதும் பனி விலகும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், நாளை தை பிறக்கவுள்ள சூழலிலும் பனி தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாகக் காலை 6 மணியளவில் வாகனங்களை இயக்குவது பெரும் சவாலான விஷயமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கடப்பந்தாங்கள் சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த 9 வாகனங்கள் வரிசையாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வேலூரிலிருந்து சென்னை நோக்கி ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் வந்த கார்கள் 2 லாரியை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த கார்கள் வாகனங்கள் 7 அடுத்தடுத்து மோதிக் கொண்டது. இதனால், அந்த சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அப்பகுதியில் வந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாகப் பனிப்பொழிவு காரணமாக நாட்டில் பல இடங்களில் விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது.