அதிமுக தோல்வி அடைந்ததற்கு சசிகலா குடும்பத்தினரே முக்கிய காரணம்
- அமைச்சர் கே.சி.வீரமணி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் அதிமுக சார்பாக கலவையை தனி தாலுக்காவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது 100 நாட்கள் கூட நடத்த முடியாது என கூறிய நிலையில் 48 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், அதில் 30 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சி பொருப்பில் அதிமுக அரசு இருந்ததாக தெரிவித்தார்.
1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுத்தோல்வி அடைந்ததற்கு சசிகலா குடும்பத்தினரே முக்கிய காரணமாக இருந்தனர்.
மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் சசிகலா குடும்பத்தினர் தங்களுடைய சொத்தாக ஆக்கி கொண்டனர். எனவும் தற்போது ஜெயலலித்தாவின் வீட்டையே தன்னுடைய வீடு என அவர்கள் கூறுவதாக குற்றஞ்சாட்டினார்.