ஆலங்குடி அரசு தலைமை மருத்துவருக்கு திருவள்ளுவர் விருது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு தலைமை மருத்துவராக பணியாற்றும் பெரியசாமிசமூகப்பணியையும்,மருத்துவத்துறையில் 5 புதிய கருவிகளை க ண்டுபிடித்தது பெருமை சேர்த்தற்காகவும் அவருக்கு திருவள்ளுவர் நற்பணி வள்ளல் விருது புதுக்கோட்டையில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் வழங்கப்பட்ட்டது.
மருத்துவர் பெரியசாமி கடந்த 30 வருடங்களாக மருத்துவ சேவையில் சிறப்பாக பணி செய்து வருகிறார் ,இதுவரை 5 புதிய மருத்துவ கண்டுபிடிப்பகளையும் ,18 மருத்துவ ஆ ராய்ச்சிகளையும் செய்து தேசிய அளவிலும்,உலக அளவி லும் நடைபெற்ற மாநாட்டில் சமர்ப்பித்து இரண்டுமுறை சி றந்த ஆராட்சிக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார் . தமிழ் தொண்டாக இதுவரை 3 தமிழ் கவிதை புத்தகங்க ளை எழுதி வெயிட்டுள்ளார்.மருத்துவத்துறையில் சிறப் பாக பணிபுரிந்து மாவட்ட ஆட்சித்தலவர் மற்றும் மாநில மருத்துவத்துறையினால் பாராட்டப்பட்டுள்ளார். இவரின் ஆராட்சிகளில் ஒன்றான ,அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தை பிறக்கும்போது தொப்புள்கொடியை உட னடியாக துண்டிக்காமல் 2 நிமிடங்கள் கழித்து துண்டிப்ப தால் குழந்தைக்கு 150 மில்லி இரத்தம் கிடைப்பதையும் அதனால் குழந்தையும் ,தாயும் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்வதையும் கண்டறிந்தது பாராட்டையும் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதையும் பெற்றுத்தந்தார். மேலும் பல்வேறு கல்லூரிகளில் திருக்குறள் பேரவையின் மூலம் திருக்குறள் நெறியை பரப்பும் விதமாக சொற்பொழிவுகள் நிகத்திவுள்ளார். ஆகவே இவருக்கு திருவள்ளுவர் நற்ப்பணி வள்ளல் விருது வழங்கப்பட்டது.