பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்த மலை கிராம மக்களுக்கு வீடு தேடி பொங்கல் பரிசு மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டுக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்ணாமலை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை.மேலும் நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்கவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு வாங்குவதற்கு நெக்கனாலையில் இருந்து மலையடிவாரம் வரை 7கிலோ மீட்டர் நடந்தே வந்து பின்னர் கிரிசமுதிரம் பகுதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பெற்றுக்கொண்டு இருந்தனர்.தற்போது திருப்பத்தூர் மாவட்டம் பிரித்த பின்னர் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் ஆணைக்கு உத்தரவின் பேரில் அரிசி,சர்க்கரை,முந்திரி,திராட்சை,கரும்பு, வேட்டி, சேலை உடன் ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை
முதல் முறையாக
வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வட்ட வழங்கல் அலுவலர் குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் பொருட்களை மலையடிவாரத்தில் கொண்டுவரப்பட்டு அங்கு அரிசி,சர்க்கரை,முந்திரி,திராட்சை,கரும்பு உடன் ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை சிறு சிறு மூட்டையாக கட்டி 12 கழுதைகள் மூலமாக மலையடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் சாலை வசதி இல்லாத நெக்கனாலை மலைக் கிராமத்தில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க
முதல் முறையாக எடுத்து செல்லப்பட்டது. இதனால் மாலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்.. tamilsudarr.page.