போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் நீலோபர் கபில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட பொது சுகாதாரதுறை மற்றும் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மேலும் வாணியம்பாடியில் ரயில் நிலையம்,அனைத்து மருத்துவமனைகள்,பள்ளிக்கூட வளாகங்கள் என பல்வேறு இடங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
உடன் சுகாதார துணை இயக்குனர் சுரேஷ்,வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பலர் கலந்துகொண்டனர்.