வாணியம்பாடி நகர காவல் நிலைய வளாகத்தில் காய்கறி தோட்டம். ஆய்வாளர் சந்திரசேகரன் ஆர்வம்.

வாணியம்பாடி நகர காவல் நிலைய வளாகத்தில் காய்கறி தோட்டம். ஆய்வாளர் சந்திரசேகரன் ஆர்வம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் நகர காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல் நிலையத்தை தூய்மையாக இருக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காவல் நிலைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தை சுத்தம் செய்து அதில் வெண்டக்காய், கத்திரிக்காய், தக்காளி போன்றவை வைத்து தோட்டம் அமைத்துள்ளார். காவல் நிலையத்தில் பணி செய்து கொண்டு ஆர்வத்துடன் பயிர் செய்யப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாயிச்சி வருகிறார். காவல் நிலைய துணை ஆய்வாளர்கள் விஜயகுமார், குமார் மற்றும் சில காவலர்கள் இவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். ஆய்வாளரின் விவசாயம் மீது உள்ள ஆர்வத்தை பார்த்து உடன் பணியாற்றிவரும் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image