திருப்பத்தூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 31வது சாலை பாதுகாப்பு வாரம் விழா மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கலந்துகொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் பெண் காவலர்கள் மற்றும் அம்மா இருச்சக்கர வாகன திட்டத்தின் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருணாநிதி, சிறப்பு காவல் ஆய்வாளர் பழனி, நகர காவல் ஆய்வாளர் பேபி உட்பட பலர் கலந்து கொண்ட பேரணி திருப்பத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் அலுவலகம் வரை சென்றது. அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுரை வழங்கினார். அதன் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.