திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் எஸ்பி விஜயகுமார் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவலர்கள் குடியிருப்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் குடும்பத்துடன் இணைந்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்.
இதனைத்தொடர்ந்து காவலர் குடியிருப்பில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கபட்டது.
மேலும் காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வாணியம்பாடி சரக துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு தனிபிரிவு காவல் ஆய்வாளர் பழனி, நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் இருதயராஜ், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், வாணியம்பாடி கிராம காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளர் லோகநாதன், ஆலங்காயம் ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் தனிப்பிரிவு போலீசார், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.