காஞ்சிபுரத்தில் கலாம் நியூ இயர் 2020 அமைப்பு சார்பில் சமூகசேவைக்காக 108 விருதுகள்..

 புத்தாண்டையொட்டி கலாம் நியூ இயர் 2020 என்ற பெயரில் கலாம் கோல்டன் அவார்ட்ஸ் 4 பிரிவுகளில் 108 விருதுகள்..


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் நாயகன் பேட்டையில் கலாம் கனவு 2020 என்ற  அமைப்பு மூலம் 108 விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு  டாக்டர் ராஜேஷ் கலாம் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவன மேலாளர்கள் பிரேம் ஆனந்த், மோகனவேல், சுதா மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பேராசிரியை ரேணுகாதேவி ஆகியோர்  கலந்து கொண்டனர் . உதவி இயக்குனர் ராஜபரணி முன்னிலை வகித்தார்.   கலாம் கனவு இந்தியா 2020 அமைப்பின் சார்பில்  2009 முதல் 2019 ஆண்டு வரை  பல்வேறு  கிராமங்களில் வறுமை ஒழிப்பு திட்டம், டாக்டர் கலாம் திட்டம் -10 ஆண்டுகள் - இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கலாம் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் . வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவரும் இலவசமாக கல்வி வேலைவாய்ப்பு பெற வேண்டும் . வறுமையில் உள்ள குடும்ப தலைவருக்கு வேலை 10 வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அளித்து ஏழ்மை நிலை அகற்ற வேண்டும் போன்ற திட்டங்களை வலியுறுத்தி  ராஜபரணி சைக்கிள் பயணமாக  டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திர மோதி இடம் அளிக்க உள்ளார். விழாவில் சிறப்பாக சமூக சேவை ஆற்றிய 108 நபர்களுக்கு கலாம் பெயரில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image