வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கபடுவார்கள் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கேரட்டையன் பேட்டி..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்அடுத்த குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடக்கரை, காவிலிபாளையம், பட்டிமணியகாரம்பாளையம் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் 1053 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினர்...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மிதிவண்டிகளை வழங்கி பின் செய்தியாளர்களிடம் பேசிய போது...
அடுத்தாண்டு அரசு பள்ளியில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்வார்கள்
8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனபது தவறான செய்தி பள்ளியின் பாட நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும். பருவ தேர்வு முறை ரத்தாவது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கினது ஆனால் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.