வாணியம்பாடியில் ஆந்திர முதல்வர் பிறந்தநாள் விழா.


திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் பேரவை சார்பில் ஆந்திர மாநில  முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம், பெண்களுக்கு இலவச சேலை வழங்குதல், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்குதல் என முப்பெரும் விழா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் பாஸ்கர் , மாநில துணைத்தலைவர் பிரேம் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னதாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.பின்னர் அம்பேத்கர்   சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கோணாமேடு பகுதியில்  உள்ள சமுதாய கூடத்தில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  சந்திரசேகர்,ஜோசப் ஜாய், அருண் ரெட்டி,ஆகியோர் கலந்துகொண்டு 
 பெண்கள் சுமார் 500 பேருக்கு இலவச சேலைகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 300 பேருக்கு இலவச சீருடை,மற்றும் அன்னதானம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image