இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை செய்யப்படும்  மத்திய அமைச்சர் ..

சென்னை:


மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து முடிவு செய்வதற்காக மாநில முதல்வர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் டெல்லியில் இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இந்த கூட்டத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஜெயலலிதாவின் நீண்ட நாள் கோரிக்கையான இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து கோரிக்கை வைத்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருப்பதால் அதிமுக சற்று உற்சாகமாக இருப்பதாக  என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image