செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம்
காந்தி நகரில் உள்ள காசா கிராண்ட் தனியார் நிறுவனத்தின் மூலம்
வீட்டு மனைகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மழை நீர் தேங்கி சாலைகளில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழை நீரால் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரியும் மற்றும் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் பொதுநல சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சங்கத்தின் தலைவர் தனசேகரன் மற்றும் செயலாளர் ரமேஷ் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
சாலைகள் சீரமைக்க கோரி பொதுநல சங்கத்தின் சார்பில் மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மனு.