சென்னை:-
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.இன்றும் உத்திரபிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சித்தார்த்,திருமாவளவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று அதே வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் ஹெச்.ராஜா,முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.