நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது.
மேலும் தமிழகத்திலும் பல இடங்களில் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் ன்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், நடிகர் சித்தார்த் மற்றும் பாடகர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..