குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் இரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
அப்போது போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய பிரியங்கா.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டமும் மக்கள்தொகை கணக்கெடுப்பும் ஏழை மக்களுக்கு எதிரானது. என குறிப்பிட்டார். இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? என கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி, இதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் அமைதியாக நடைபெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.