செங்கல்பட்டு அருகே ஜீவா ஹேப்பி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா 





செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்  பெரிய தெருவில் உள்ள ஜீவா  மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று  கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை பள்ளி தலைவர் ஜி கே பாபு  ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் துணைத் தலைவர்  கோமலவதி பாபு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஏசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறோம் . அவர் பிறப்பை நினைவு கூறும் விதமாக குடில் அமைக்கப்பட்டிருந்தது. மழலையர் பள்ளி ஆசிரியை பிரீத்தி ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் ரகுவீரன் விழாவில்  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாசகத்தை நினைவுகூரும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார். மேலும் அவர் ஆடி பாடி குழந்தைகளை மகிழ்வித்தார். திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை பகுதியில் உள்ள ஜீவா மெமோரியல் பப்ளிக் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜீவானந்தம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.




 


 

Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image