விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து செய்தியார்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, .இந்திய நாட்டை அவமதிப்பு செய்யும் நாட்டில் உள்ளவர்களுக்காக ஏன் இங்கு போராட வேண்டும். மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது. மோடி போன்ற இரும்பு மனிதர் இல்லையென்றால் வன்முறையால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும். மோடியின் தலைமை இந்தியாவிற்கும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை தமிழகத்திற்கும் தேவை. அதிமுக ஆதரிக்கும் அனைத்து திட்டங்களையும் திமுக எதிர்ப்பதையும் அதற்கு ஒரு காரணத்த்தை தெரிவிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.முதல்வர் ஆதரிக்கும் அனைத்து திட்டங்களையும் எதிர்பவராக மட்டுமே முக ஸ்டாலின் உள்ளார், நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் முக ஸ்டாலினுக்கு கிடையாது. நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு சிறிதளவும் கிடையாது. அந்தக்காலம் முதல் மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதுதான் திமுகவின் வழக்கமான செயல், அதைத்தான் தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக செய்து வருகிறது. காலப்போக்கில் திமுக காணாமல் போய்விடும். மாணவ சமுதாயத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறாமல் நாட்டை ஸ்தம்பிக்க வைப்பது, போராட்டத்தை தூண்டுவது போன்ற செயலில் திமுக காங்கிரஸ் ஈடுபடுவது வெட்கக்கேடான செயல். படிக்கும் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும். நாட்டுப்பற்றுள்ள யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடி தற்பொழுது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அதனை திசை திருப்பி நாட்டை துண்டாடும் வகையில் திமுக காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக முதல்வர் தனி குழு அமைத்துள்ளார், அந்த குழுதான் முடிவு செய்யும். முதல்வர் ஒருபோதும் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டார், தமிழ் உணர்வு உள்ளவர் முதல்வர். தமிழையும், தமிழர்களையும் அடகு வைத்து அரசியல் செய்யும் ஈனத்தனமான செயலை அதிமுகவும், தமிழக முதல்வரும் ஒருபோதும் செய்யமாட்டார். ஊரையும் நாட்டையும் பிளவுபடுத்தும் திமுக உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்கும் தகுதியை இழந்துவிட்டது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தமிமுன் அன்சாரி ஒரு மதத்திற்காக பேசக்கூடிய மத வெறியர் அதிமுக அனைத்து மதத்திற்காகவும் போராடும் தமிமுன் அன்சாரிக்கு அதிமுகவும் இந்துக்களும் வாக்களிக்கவில்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியுமா? ஒரு மதத்திற்காக கட்சியை வைத்துக்கொண்டு அனைத்து மத வாக்குகளையும் பெற்றுக்கொண்டு மற்ற மதத்தினரை துன்புறுத்துவது, கேலி பேசுவது தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா போன்றவர்களின் வாடிக்கையாக உள்ளது இந்தியாவில் உள்ளவர்கள் தங்களின் குடும்ப வளர்ச்சியை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும் அதை விடுத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஏன் இந்தியாவில் போராட வேண்டும் என்று கூறினார்.