பருத்தி சாகுபடி செய்யவதில்லை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆந்திரா மாநிலம் குப்பம் போன்ற பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அப்படி விவசாயம் செய்யும் பருத்தியை திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் வளாகத்தில் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் ரகசிய டெண்டர் மூலம் நடைப்பெறுகிறது. இன்று 44ஆம் ஆண்டு பருத்தி ஏல விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர், பருத்தி வியாபாரிகள், விவசாய பெரும்குடி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார்.