கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதிகளில் இயங்கி வரும் ஜேக்கப் குழும பள்ளிகளில் 31ஆவது ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா (ம) கலை விழா வெகு விமர்ச்சையாக கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஜேக்கப் கல்வி குழும பள்ளி தாளாளர் ஜே ஒய் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார் முதல்வர் ஜெ ஜாய்ஸ் மரியா முன்னிலை வகித்து வரவேற்றார் இதில் சிறப்பு விருந்தினர்களாக பாஸ்டர்கள் ஜார்ஜ்விக்டர் சாது பீட்டர் சார்லஸ் பின்னி (ம) சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜெருசலேமில் இயேசுநாதர் குழந்தையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை மிகவும் தத்ரூபமாக நடித்துக் காட்டியதை சிறப்பு விருந்தினர்கள் கண்டு களித்தனர் மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ் கேக்குகளை வழங்கி பாராட்டி உச்சி முகர்ந்தனர் மேலும் இதில் அகடமிக் இயக்குனர் வித்தியாசங்கரன்
அட்மின் இயக்குனர் ஜோஸப் ஜான்ஸன் மேலாளர் ராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..