தமிழகத்தில் ஊரக ஊராட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் இன்று முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது.அனைத்து வாக்குசாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் என்பதால் வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வருகை தந்து வரிசையில் நின்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்.
சேலத்தில் வரிசையில் நின்று உள்ளாட்சித் தேர்தலில் குடும்பத்தினருடன் வாக்களித்த முதல்வர் பழனிசாமி.