அதிமுக தலைமை அலுவலத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் உள்ளிடோர் அவசர ஆலோசனை.

சென்னை: அதிமுக தலைமை அலுவலத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் உள்ளிடோர் அவசர ஆலோசனையை மேற்கொண்டனர்.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி இன்று சென்னையில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த பேரணிக்கு காவல் துறையினர் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், நிலோபர் கபில், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அவசர ஆலோசனையை மேற்கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image